நெகிழ்ச்சியுடன் பேசிய அஜித் மாமனார் !!!

by vignesh

அஜித் குறித்து ஷாலினியின் தந்தை ஏ.எஸ்.பாபு நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கும் விஷயம் பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ஷாலினியின் தந்தையும், அஜித்தின் மாமனாருமான ஏ.எஸ்.பாபு தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அஜித் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார். அதில் பேசிய பாபு, “அஜித்குமார் எப்போதுமே வேகம்தான்.  அன்று எப்படி இருந்தாரோ இப்பவரைக்கும் அப்படியேத்தான் இருக்கிறார். இரண்டு குடும்பங்களும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறோம். இரண்டு குடும்பங்களையும் அப்படி தாங்குகிறார்.

அஜித்துக்கும் ஷாலினிக்கும் ஜாதகம் பார்த்தபோது பத்து பொருத்தமும் பக்காவா இருப்பதாக சொன்னார்கள். அவர்கள் சொன்னது உண்மைதான். அப்படியொரு ஜோடி அவர்கள். அஜித் எங்களுக்கு மருமகன் இல்லை இன்னொரு மகன். வீட்டுக்கு யார் வந்தாலும் தண்ணீர் கொடுப்பதிலிருந்து சாப்பாடு பரிமாறுவதுவரை அவரேத்தான் செய்வார்.வேலையாட்களை குடும்ப உறுப்பினர் போல் நடத்துவார். அந்த குணம் மற்றவர்களையும் பற்றிக்கொள்ளும். அவ்வளவு பாசிட்டிவிட்டியோடு அன்பை பரிமாற தோன்றும்” என்றார்.

You may also like

Leave a Comment