சட்டசபையில் விசில் அடித்த பாலகிருஷ்ணா!!!

by vignesh

ஆந்திர சட்டசபையில் தெலுங்கு நடிகரும், தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ-வுமான நந்தமுரி பாலகிருஷ்ணா விசில் அடித்து அமளியில் ஈடுபட்டார்.

ஆந்திராவில் கடந்த 2018-ம் ஆண்டு, திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ.371 கோடி கைமாறியதில் ஊழல் நடந்ததாக சந்திரபாபு நாயுடு கடந்த சில தினங்களுக்கு முன்பு சிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.   இந்துபுரம் தொகுதி எம்எல்ஏவும் நடிகருமான நந்தமுரி பாலகிருஷ்ணா, ஆந்திர நீர்வளத்துறை அமைச்சர் அம்பதி ராம்பாபுவை நோக்கி தனது படங்களில் வருவது போல தொடைகளை தட்டியும், மீசையை முறுக்கியும் சவால்விடும் வகையில் சைகை செய்தார்.

பாலகிருஷ்ணாவின் இந்த செயலை கண்டித்த சபாநாயகர் தம்மினெனி சீதாராம், “இதை பாலகிருஷ்ணாவின் முதல் தவறாக கருதி அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அவையின் விதிமுறைகளை மீறி உறுப்பினர் யாரேனும் அநாகரிகமாக நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

 

You may also like

Leave a Comment