கார் விபத்தில் சிக்கிய சின்மயி !

by vignesh

பிரபல பின்னணி பாடகி சின்மயி சாலை விபத்து ஒன்றில் சிக்கி உள்ளார்.  இவர்  ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி எட்டு ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்த இந்த ஜோடிக்கு கடந்த ஆண்டு இரட்டை குழந்தை பிறந்தது.

சோஷியல் மீடியா பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் சின்மயி, விபத்தில் சிக்கியது குறித்து எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், குழந்தைகளுடன் சின்மயி காரில் சென்றபோது குடிபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் வேகமாக எனது கார் மீது மோதிவிட்டு, நிற்காமல் தப்பித்தும் சென்று விட்டார்.

இந்த விபத்தில் தனக்கோ அல்லது தன் உடன் இருந்தவர்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை என்றும், தெரிவித்துள்ளார். மேலும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என்றும் சின்மயி பதிவிட்டுள்ளார். இந்த பதிவினைப் பார்த்த ரசிகர்கள்  நலம் விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment