விஜயகாந்த்திற்கு வாய்ப்பு வாங்கித் தந்த கே.பாக்யராஜ்…

by vignesh

பி.வி.பாலகுரு இயக்கத்தில், கே.பாக்யராஜ், ராஜேஷ், வடிவுக்கரசி உட்பட பலர் நடித்த படம் ‘கன்னிப் பருவத்திலே’. வைரவனின் கதைக்கு கே.பாக்யராஜ் திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார்.

இந்தப் படத்தில் மாடு பிடிக்கும் வீரராக விஜயகாந்த் நடித்தால் சரியாக இருக்கும் என்று நினைத்த பாக்யராஜ், தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவிடம் விஜயகாந்தை அறிமுகப்படுத்தினார். ஆனால், இயக்குநர் பாலகுரு, ராஜேஷை ஏற்கனவே பேசி வைத்திருந்ததால் விஜயகாந்த் நடிக்க முடியாமல் போய்விட்டது. அவர் நடித்திருந்தால் அவருடைய அறிமுகப்படமாக இது இருந்திருக்கும் என்று கூறியிருக்கிறார் கே.பாக்யராஜ் .

You may also like

Leave a Comment