தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் நெல்சன் திலீப்குமார்

by vignesh

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா படத்தில் துவங்கிய தன்னுடைய பயணத்தை தற்போது ஜெயிலர் படம் மூலம் சிறப்பாக்கியுள்ளார்.

தற்போது அவர் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். நெல்சனின் உதவி இயக்குநர் சிவபாலன் இயக்கவுள்ள படத்தை தயாரிக்கவுள்ளார் நெல்சன். இந்தப் படத்தில் கவின் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கவினுக்கு பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டில் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமாரின் முதல் தயாரிப்பிலும் கவின் இணைந்துள்ளது அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படத்தின் நாயகன், நாயகி கன்பார்ம் ஆன நிலையில், அடுத்ததாக படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

You may also like

Leave a Comment