சித்தார்த்யிடம் மன்னிப்பு கேட்ட பிரகாஷ் ராஜ்.,

by vignesh

நடிகர் சித்தார்த்தின் திரைப்பட விழாவில் கன்னட அமைப்பினர் கோஷங்கள் எழுப்பிய நிலையில் அந்தச் சம்பவத்துக்காக அனைத்து கன்னடர்கள் சார்பிலும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் பிரபலமான பிரகாஷ்ராஜ் அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் #justasking என்ற ஹேஷ்டேகின் கீழ் அரசியல் கருத்துகளைப் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், எக்ஸ் தளத்தில் கருத்திட்ட அவர், “ஆம் அவை எங்களுடைய அரசியல் கட்சிகள் தான். பல ஆண்டுகளாக பிரச்சினையைத் தீர்க்க முடியாத கட்சிகள். அதற்குக் காரணமான தலைவர்களைக் கேள்வி கேட்காமல், இவ்விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத எம்.பி.க்களைக் கேள்வி கேட்காமல், சாமான்ய மக்களை கொடுமைப்படுத்துவதும், கலைஞர்களை இம்சிப்பதும் தவறு. அனைத்து அன்பான கன்னடிகர்கள் சார்பிலும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று நடிகர் சித்தார்த்திடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

 

You may also like

Leave a Comment