அஜித்தை நினைத்து கண்கலங்கிய எஸ்ஜே சூர்யா !!

by vignesh

வாலி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்ஜே சூர்யா.  இந்நிலையில், அஜித் தனக்கு வாய்ப்புக் கொடுத்தது குறித்து எஸ்ஜே சூர்யா நெகிழ்ச்சியாக பேசியது வைரலாகி வருகிறது.

இந்நிலையில், தனது முதல் படமான வாலி குறித்து நினைவுகளை பகிர்ந்த எஸ்ஜே சூர்யா, அதில் ஹீரோவாக நடித்த அஜித் பற்றி பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தப் படத்தை இயக்கிய போது எஸ்ஜே சூர்யாவுக்கு கார் அன்பளிப்பாக கொடுத்து அசத்தியவர் அஜித்.

ஆனால், வாலி ஷூட்டிங் தொடங்கும் முன்னர் எஸ்ஜே சூர்யா ரொம்பவே மோசமான காஸ்ட்யூமில் இருந்துள்ளார். பட்டன் இல்லாத சட்டை, தைத்து போடப்பட்ட செருப்பு என பார்க்க எப்படியோ இருப்பாராம் எஸ்ஜே சூர்யா. ஆனால், அதையெல்லாம் ஒரு பொருட்டாக பார்க்காத அஜித், எல்லோரது முன்னிலையிலும் எஸ்ஜே சூர்யாவின் தோளில் கையை போட்டு, “இவருதான் என்னோட அடுத்த படத்துக்கு டைரக்டர், என்னோட டைரக்டர்” என அறிமுகப்படுத்தி வைப்பாராம். இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த எஸ்ஜே சூர்யா, நானாக இருந்திருந்தால் அஜித் சார் மாதிரி பெருந்தன்மையாக நடந்திருப்பேனா எனத் தெரியவில்லை. அவர் தான் என்னோட வாழ்வில் விளக்கு ஏற்றி வைத்தவர். அவர் கொடுத்த வாழ்வு தான் இன்று நான் இந்த இடத்தில் இருக்கிறேன் என எஸ்ஜே சூர்யா கண்கலங்கியபடி பேசியுள்ளார். எஸ்ஜே சூர்யாவின் த்ரோபேக் பேட்டியில் இருந்த இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment