ரத்தம் பட புரமோஷன்; விஜய் ஆண்டனி என்ன சொன்னார் தெரியுமா??

by vignesh

விஜய் ஆண்டனி, நந்திதா, மஹிமா நம்பியார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ரத்தம் படம் அடுத்த வாரம் அக்டோபர் 6ம் தேதி திரைக்கு வருகின்றது.

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா கடந்த 19ம் தேதி தற்கொலை செய்து கொண்டார் .  மகள் இறந்து 10 நாள் கூட ஆகல, அதுக்குள்ள பட புரமோஷனுக்கு வந்துட்டாரே என ஏகப்பட்ட விமர்சனங்கள் கிளம்பி உள்ள நிலையில், ரத்தம் படத்தின் பிரஸ்மீட்டில் அதற்கு எல்லாம் பதில் அளிக்கும் விதமாக விஜய் ஆண்டனியின் பேச்சு இருந்தது நெகிழ வைக்கிறது.

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் ரத்தம் படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். சி.எஸ். அமுதனின் தந்தை தான் இசையே தெரியாத தனக்கு இசை கற்றுக் கொடுத்த குரு என்றும் மியூசிக்கை எனக்கு இலவசமாக எளிமையாக கற்றுக் கொடுத்தார். அந்த நன்றிக் கடனை நான் செலுத்த வேண்டும் என நினைக்கிறேன் என மன வேதனையுடன் ரத்தம் பட பிரஸ்மீட்டில் கலந்துக் கொண்ட விஜய் ஆண்டனி பேசியது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

You may also like

Leave a Comment